அண்மையில் திருமணமான 21 வயதுடைய இளம் பெண்ணை பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து, அந்த வீடியோவை காண்பித்து மேலும் பலர் பலாத்காரம் செய்ய முயன்ற விவகாரத்தில் 5 காமுகர்களை இமாடுவ பொலிசார் கைது செய்துள்ளனர். 18, 19, 20, 24 மற்றும் 30 வயதுடையவர்களே கைதாகியுள்ளனர்.
வேறு பிரதேசமொன்றை சேர்ந்த அந்த இளம்பெண், இமாடுவ பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். பின்னர் கணவரின் ஊரிலேயே வாழ்ந்து வந்துள்ளார்.
அவருக்கு திருமணத்திற்கு புறம்பான முறையில், அதே கிராமத்தை சேர்ந்த இளைஞன் ஒருவருடன் சில தினங்களின் முன் உறவு ஏற்பட்டது பொலிசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் 30 வயதான சந்தேகநபரும், இன்னொருவரும் சம்பவதினத்தில் யுவதியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி உறவு கொண்டுள்ளார். இதை மற்றைய சந்தேகநபர் வீடியோ பதிவு செய்துள்ளார்.
பின்னர், கடந்த மாதம் 29 ஆம் திகதி- தற்போது கைதான- ஐந்து சந்தேகநபர்களும் இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று, தம்முடன் ஒத்துழைக்காத பட்சத்தில் வீடியோவை பதிவேற்றுவதாக மிரட்டி, பாலியல் வல்லறவிற்குள்ளாக்கியுள்ளனர்.
இது குறித்து பொலிசாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து, சந்தேக நபர்களை கைது செய்தனர்.