அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை கூட்டுறவாளர்களுடனான சந்திப்பு ஒன்று இன்றைய தினம் இடம் பெற்றது. இதன் போது பனை தென்னை கூட்டுறவாளர்களின் தேவைகள் கேட்டு அறியப்பட்டது.
அதன்பின் ஊடகங்களுக்கு கருத்தரிக்கும் போது, பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி நீதியமைச்சருக்கு கடிதம் அனுப்பியமை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர்,
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி பலர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அனைத்தும் கோரிக்கைகளாகவே உள்ளன.
அந்த கோரிக்கைகளின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து அரசாங்கம் நீதியான தீர்வினை வழங்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன் போது அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து நீங்கள் அழுத்தங்கள் கொடுத்துள்ளீர்களா என வினவிய போது,
நான் கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன். இருப்பினும் நான் தேர்தல் காலங்களில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை அதாவது இவ்வாறான அரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கதைப்பதற்கு எனக்கு போதியளவு ஆணையினை தாருங்கள் என கேட்டிருந்தேன்.
எனினும், அவர்கள் எனக்கு நான் கேட்டளவிற்கு ஆணையினை தரவில்லை. ஆணையினை தந்திருந்தால் நான் அதனை செய்திருப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.


















