யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்டனர் எனும் குற்றச்சாட்டின் கீழ் மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.நகர் பகுதியில் வசிக்கும் ஊடகவியலாளர் மீது நேற்றைய தினம் புதன்கிழமை, வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி, அவரது கையடக்கத் தொலைபேசியையும் பறித்து சென்றது.
தாக்குதல் சம்பவம் குறித்து யாழ்ப்பாண காவல்துறை நிலையத்தில் ஊடகவியலாளரால் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில். குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் , தாக்குதல் மேற்கொண்டனர் எனும் குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் மூவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரிடமும் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.