இன்று காலை புதுக்காட்டுச்சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். கிளிநொச்சி பளை பொலீஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்காட்டுச்சந்தி பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் பளை பிரதேசத்தின் புலோப்பளை மேற்கை சேர்ந்த 56 வயதான கிருஸ்ணன் நவநீதன் என்பவர் பலியாகியுள்ளார்.
கிளிநொச்சி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது யாழ் நோக்கி பயணித்த டிப்பர் புதுகாட்டுச்சந்தியில் திரும்பிய வேளை குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இச்சம்பவமானது இன்று காலை 9.15மணியளவில் இடம்பெற்றுளதாக தெரியவருகிறது.
உயிரிழந்த நபரை படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக கிளிநொச்சி பொதுவைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் முன்னெடுத்த வருகின்றனர்.



















