யாழ்ப்பாணம் மருதனார் மட சந்தையில் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்றுள்ளாமை உறுதிசெய்யப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மருதனார்மடம் சந்தையில் மரக்கறி கடை வைத்துள்ள ஒருவரே இவ்வாறு தொற்றிற்குள்ளாகினார்.
குறித்த பகுதியில் உள்ள முச்சக்கரவண்டி சாரதிகளிடம் எழுமாற்றாக பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டபோது குறித்த நபரும் முச்சக்கர வண்டி வைத்திருப்பவர் என்ற அடிப்படையில், பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே அவருக்கு தொற்று உறுதியானது.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது தொற்றாளர் இவராவார்.
எனினும் குறித்த வியாபாரிக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் உறுதியாகவில்லை எனவும் கூறப்படுகின்றது.