சமஸ்டியை எதிர்த்தவர்கள் இன்று எதையாவது தாருங்கள் என கோருமளவிற்கு தமிழ்த் தலைமைகள் வந்துவிட்டன என என கேட்பது வேடிக்கையான விடயம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடமை்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் இடம்பெற்றது. குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கான தீர்வை காண்பதற்கு இப்போது இருக்கின்ற தமிழ் தலைமைகள் எவ்விதமான முயற்சியையும் முன்னெடுக்கவில்லை. காலங்களிலும் இவர்கள் அதை எடுக்கப்பபுாவதில்லை. சமஸ்டி தீர்வைக்கூட காலம் காலமாக எதிர்த்தவர்கள் இப்போது எதையாவது தாருங்கள் என்று கேட்பது வேடிக்கையான விடயமாகும். தமிழ் மக்களிற்கான பிரச்சினை தீர்வாக 1949ம் ஆண்டிலேயே சமஸ்டி பற்றி பேசப்பட்டது. காலப்போக்கில் சமஸ்டி முறையிலான தீர்வை வழங்குவதற்கு சிங்கள தலைவர்களும் சிங்கள மக்களும் இணங்கியிருந்தார்கள்.
குறித்த காலப்பகுதியில் ரணில் விக்ரமசிங்க சமஸ்டி தீர்வை முன்வைத்து தேர்தலில் களமிறங்கினார். ஆனால் தமிழ் தலைமைகள் அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்தனர். ரணில் விக்ரமசிங்க ஒருலட்சம் வாக்குகளால் தோல்வியடைந்தார். அப்போது சமஸ்டி கிடைத்திருந்தால் இன்று 10 ஆண்டுகளிற்கு மெல் சமஸ்டி தீர்வு கிடைத்திருக்கும். அப்போது அதனை ஏற்றுக்கொள்ளாத எமது தலைமைகள் இப்போது எதையாவது தாருங்கள் என்று கேட்கின்றார்கள் என்பது வேடிக்கையான விடயம் என குறிப்பிட்டார்.
இன்றைய சூழலில் ஓர் சுமுகமான சூழ்நிலையை உருவாக்க தமிழ்க் கட்சிகள் விரும்பவில்லை. கூட்டாக இருந்த தமிழர் விடுதலைக்கூட்டணியை பதவி ஆசைக்காக உடைத்து சென்றனர். 2004ம் ஆண்டில் சாதகமான சூழ்நிலை ஏற்பட்டது அதனை சரியாக பயன்படுத்த தவறிவிட்டனர். அந்த காலப்பகுதியில் தான் தமிழ் மக்களிற்கு எதிரான ஓர் அனர்த்த்தை ஏற்படுத்தி தமிழ் மக்களை அடிமையாக்கியிருக்கின்றார்கள். இதற்கான முழு பொறுப்பாளிகளும் மாவை சம்பந்தன் போன்றோராகும்.
சகல உரிமைகளும் பறிகப்பட்ட 2004ம் ஆண்டில் தேர்தல் இடம்பெற்றது. ஒற்றுமையாக செயற்பட்ட கட்சியை இப்போதுள்ள அரசியல் கட்சியின் சம்பந்தன், மாவை ஆகியோர் உடைத்தார்கள். எனக்கும் அப்புாது அச்சுறுத்தல்கள் மத்தியிலும் துப்பாகிகளிற்கு மத்தியிலும் எமது உரிமைகளை விட்டுக்கொடுக்க கூடாது என்பதற்காக நான் இந்த கட்சியை வளர்த்துள்ளேன். இப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியை இல்லாது செய்ததன் விளைவாக தமிழ் மக்கள் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்துள்ளனர்.
என்னுடைய அரசியல் வரலாற்றில் விடுதலைப் புலிகக்களை அழிக்க நான் ஒருபோதும் விரும்பியதில்லை. ஆனால் யுத்தம் முடிந்த பின்னர் கொத்து கொத்தாக தமிழர்களை கொலை செய்த சரத் பொன்சேகாவிற்கு மாவை சம்பந்தன் ஆகியோர் ஆதரவை வழங்கியிருந்தார்கள் என்று குறிப்பிட்ட அவர் 2004ம் ஆண்டு 22 பாராளுமன்ற உறுப்பினர்களும் விடுதலைப்புலிகளின் பங்களிப்புடன் வென்றார்களேயன்றி அவர்கள் தாங்கலாக வெல்லவில்லை எனவும் குறிப்பிட்டார்.
இறந்தவர்களிற்கு அங்சலி செலுத்தும் வகையில் மாவீரர் நாள் பற்றி எல்லோரும் பேசிக்கொண்டார்கள். அவர்கள் அதை தமது பதவிக்காகவே அங்சலி தொடர்பில் பேசினார்களேயன்றி உண்மையான உணர்வோடு அஞ்சலி செலுத்த அவர்கள் விரும்பவில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
இன்று சகலதையும் துறந்து 60 வருட அரசியல் அனுபவத்தோடு 87 வயது வரை நான் இந்த கட்சியில் இருந்து வருகிறேன். தமிழர் விடுதலைக் கூட்டணியானது எனது கட்சி அல்ல. இந்த கட்சியை வளர்ப்பதில் பாடுபட்டவன் நான். தமிழ் காங்கிரஸ், தமிழரசு கட்சி, மலையக கட்சி இவற்றை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டதே இந்த கூட்டணி. இந்த சரியான பாதையில் இயங்கிக்கொண்டிருந்தது.
அதன் ஊடாக தமிழ் மக்களிற்கு ஓர் பிரதிநிதித்துவம் இருந்தது. இந்த கட்சியை மாவை சம்பந்தன் இருவருமே உடைத்தார்கள். தமிழரின் பிரதிநிதித்துவத்தை இழக்க செய்தார்கள். இப்போது சிங்கள தலைமைகள் தமிழர்களுக்கு மூன்று வேளை உணவு கொடுத்தால் போதாதா என்று பெசும் அளவிற்கு தமிழ்த் தலைமைகள் தமிழர்களை கொண்டுவந்து தெருவிலே விட்டுள்ளார்கள் என அவர் குறித்த ஊடக சந்திப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.


















