திருகோணமலை- அபயபுர மற்றும் தினநகர் ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று காலை 6 மணிமுதல் இந்தப்பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு செயலகத் தலைவர், இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
மறு அறிவித்தல் வரை இது நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை வெல்லம்பிட்டிய- “லக்சாந்த செவன” வீடமைப்புத் திட்டத்தின் தனிமைப்படுத்தல் இன்று காலையுடன் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.