களுவாஞ்சிக்குடி காவல்துறையின் பார்வையில் உள்ள பெரிய கல்லாறு பகுதியில் வீடு ஒன்றில் இருந்து சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்றைய தினம்(10) இடம்பெற்றுள்ளார்.
சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்ட குறித்த குழந்தையின் தாய் குடும்ப கஷ்டத்தின் காரணமாக வெளிநாட்டில் வீட்டு பணி பெண்ணாக வேலைசெய்து வருவதாகவும்,
இந்த சிறுமியை தனது தங்கையிடம் தான் வரும் வரை பார்த்து கொள்ளுங்கள் என்று விட்டு சென்றதாகுவும் கூறினார்.
இந்த சிறுமியை நாளுக்கு நாள் சித்திரவதை செய்து வந்ததாகவும் உணவு கொடுக்காமலும் அறைகளின் வைத்து பூட்டி வைப்பதாகவும் அயல் வீட்டார்கள் காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் உடம்பில் அடி காயங்கள் அதிக அளவில் இருப்பதை கண்ட களுவாஞ்சிக்குடி பொலிஸ் அதிகாரி உடன் சிறுமியின் சித்தியை கைது செய்து பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவுக்கு விசாரணை முன் எடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எனவே யாரையும் நம்பி உங்கள் குழந்தைகளை யாரிடமும் விட்டு செல்ல வேண்டாம்….
உங்கள் குழந்தைகளை உங்கள் பார்வையில் இருப்பது கவனம் செலுத்துவது போன்று இல்லை என்பது இந்த 11வயது சிறுமியின் கொலை நிருபித்து உள்ளது என சமூக ஆவர்லர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


















