பாடசாலை கட்டிடமொன்றை திறந்து வைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்த ஆச்சரிய சம்பவம் நேற்று இடம்பெற்றது.
மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பாடசாலை நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி, அக்கட்டிடத்தை திறந்து வைக்குமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார்.
பொலனறுவை மெதிரிகிரியவில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய ஜனாதிபதியும் கலந்துகொண்டனர்.
அந்நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, மைத்திரிபால சிறிசேனவை நோக்கி “இது கட்டப்படுவதற்கு காரணமாயிருந்த மைத்திரியே இதனை திறந்துவைக்கவேண்டும்” என அழைப்பு விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி கட்டிடத்தை திறந்து வைத்தார்.