இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 283 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயதுடைய பெண் ஒருவரரும், மருதானை பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவரரும், மற்றும பூஜாபிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.