வேலணை பிரதேச செயலாளர் சோதிநாதன் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் வவுனியா, செட்டிக்குளம் பிரதேச செயலாளராக மாற்றப்பட்டார். இதுவரை செட்டிக்குளம் பிரதேச செயலாளராக கடமையாற்றிய சிவகரன், வேலணைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
அண்மையில் வேலணையில் கடற்படை தளம் அமைக்க, பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. எனினும், பொதுமக்கள் அதை எதிர்த்தனர்.
காணி சுவீகரிப்பிற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்ற விடயத்தை காணி அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சிற்கு அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை அவருக்கான இடமாற்ற அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.