கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. அளவான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மத்திய மலை நாட்டின் கிழக்கு சரிவுகளிலும் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களில் பல இடங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் சில இடங்களில் சுமார் 100 மி.மீ அளவான மழை வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம் எனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், மத்திய, சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் பனி மூட்டமான வானிலையை எதிர்பார்க்கலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை தற்காலிகமாக ஏற்படக்கூடிய வலுவான காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.