கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீயை அணைப்பதற்கு 7 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும் ஸ்ரீலங்கா விமானப்படைக்கு சொந்தமான உலங்குவானூர்திகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.