இலங்கையில் அரசியல் கட்சிகளை உருவாக்க இந்தியாவுக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை என பேராசிரியர் மடகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையை தனது மற்றொரு மாநிலமாக இந்தியா கருதக்கூடாது என்றும் தெரிவித்தார்.
நாட்டில் ஒரு அரசியல் சக்தியை நிலைநாட்ட இந்தியா தலையிடுமாக இருந்தால் அது இந்தியாவின் வெட்கமற்ற தன்மையைக் காட்டும் என்றும் பேராசிரியர் மடகொட அபயதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டார்.
மேலும் கிழக்கு கொள்கலன் முனையத்திற்கு உரிமை கோர முடியாத காரணத்தினால் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவது இந்திய அரசாங்கத்திற்குள் இருக்கும் விரக்தியையும் ஊழலையும் காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.