துறைமுகத்தில் இடம்பெறும் பல்வேறு முறைகேடுகளை கட்டுப்படுத்த, அரச புலனாய்வு சேவையின் காரியாலயம் ஒன்றை நிறுவுவதற்கு துறைமுக அதிகார சபை தீர்மானித்துள்ளது.
அதன் தலைவரான ஜெனரல் தயா ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக இடம்பெறும் முறைகேடுகளை கண்டறியவதற்காக இவ்வாறு அரச புலனாய்வு சேவை காரியாலயத்தை நிறுவ உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்திற்கு, புதிய பளுதூக்கல் நிலைதாங்கிகளை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக கிழக்கு முணையத்தின் கொள்ளளவு தொடர்பில் பாரிய பிரச்சினைகள் உள்ளன.
அந்தப் பிரச்சினை நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கக்கூடியதாகும்.
எனினும், இந்த ஆண்டு நிறைவடைவதற்குள், அதன் கொள்ளளவு திறனை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கிழக்கு முனையத்தின் பணிகள் தற்போது தங்களால் முன்னெடுக்கப்படுகின்றமையால், தங்களின் திட்டங்களை தற்காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் பொருந்தும் வகையில் திட்டமிடப்பட்டு, புதுப்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
புதிய தொழில்நுட்பத்திற்கு பொருத்தமான வகையில், துறைமுக அதிகார சபையின் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் நோக்குடன், புதிய பளுதூக்கல் நிலைதாங்கிகளை கொண்டுவரும் பணிகளை முன்னெடுப்பதாகவும் துறைமுக அதிகார சபைத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.