பரிஸ் மற்றும் இல் து பிரான்சுக்குள் ஊரடங்கு நடைமுறைக்கு கொண்டுவருவது தொடர்பில் இன்று முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளது.
இந்த சந்திப்பில் இரு துருவங்களான பரிஸ் நகர முதல்வர் Anne Hidalgo மற்றும் இல் து பிரான்ஸ் மாகாண முத்லவர் Valérie Pécresse ஆகியோர் சந்தித்து உரையாட உள்ளனர். இல் து பிரான்சுக்குள் கொரோனா தொற்று மிக தீவிரமாக உள்ள நிலையில், பகுதி நேர ஊரடங்கு (மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான) பலனளிக்கவில்லை எனவும், மூன்றுவார கால முழுமையான ஊரடங்கு தேவை எனவும் பரிஸ் நகர முதல்வர் மூன்று நாட்கள் முன்னர் கோரிக்கை வைத்திருந்தார்.
ஆனால் இந்த கோரிக்கைக்கு பிரதமர் Jean Castex உடனடியாகவே எதிர்வினையாற்றினார். <<மூன்றுவார கால முழுமையான ஊரடங்கு முட்டாள் தனமானது!>> என தெரிவித்திருந்தார். அதேவேளை பரிசுக்குள் கட்டுப்பாடுகளை இறுக்கமாக்குவதற்குரிய நடவடிக்கைகள் மேகொள்ளப்படும் எனவும் பிரதமர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே, இன்று இடம்பெறும் இந்த சந்திப்பு முக முக்கியமானதாக உள்ளது. இன்று திங்கட்கிழமை நண்பகலுக்கு பின்னர் இடம்பெறும் இந்த சந்திப்பை அடுத்தே பரிசில் முழுமையான ஊரடங்கு உள்ளதா இல்லையா என்பது தெரியவரும்.