பிரான்சின் மிகவும் பலம் வாய்ந்த பேர்விமானமான RAFALE விமானங்களின் தாயரிப்பு நிறுவனமான Dassault -ன் வாரிசும், பாராளுமன்ற உறுப்பினருமான Olivier Dassault இன்று விபத்தில் கொல்லப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் போர்விமான சக்கரவர்த்தியான Serge Dassault என்பவரின் மூத்த மகனான ஆலிவர் டசால்ட் செர்கே, ரபேல் போர் விமானங்களை கட்டும் தொழிலை செய்து வந்தார்.
மட்டுமின்றி மத்திய-வலது குடியரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் 69 வயதான ஆலிவர் டசால்ட் செயல்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், பிரான்சின் வடக்கே நார்மண்டி நகரில் கலாவ்டோஸ் என்ற பகுதியில் ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கி ஆலிவர் டசால்ட் மரணமடைந்துள்ளார்.
கடந்த இரு நாட்களுக்கு முன் பாரீஸ் நகரருகே பியூவாயிஸ் என்ற பகுதியில் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் மற்றும் உள்விவகார அமைச்சர் ஜெரார்டு டார்மனின் ஆகியோருடன் பொது நிகழ்ச்சி ஒன்றில் டசால்ட் காணப்பட்டார்.
டசால்ட் மறைவுக்கு ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் டுவிட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதில், நம்முடைய நாட்டிற்கு சேவையாற்றும் பணியை டசால்ட் ஒருபோதும் நிறுத்தியதே கிடையாது. அவரது திடீர் மரணம் பேரிழப்பு ஏற்படுத்தியுள்ளது என பதிவிட்டுள்ளார்.
சுமார் 6 பில்லியன் யூரோக்கள் சொத்துக்களைக் கொண்ட டசால்ட் தனது இரண்டு சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுடன் உலகின் 361 வது பணக்காரராக கருதப்பட்டார்.
அரசியலில் கவனம் செலுத்தத் தொடங்கிய பின்னர் அவர் டசால்ட் குழுமத்தின் முக்கிய பொறுப்புகளில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.