ஐபிஎல் 14ஆவது சீசனுக்காக டோனி கடுமையாகப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார் என சிஎஸ்கே அணி உரிமையாளர் ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தூணாக டோனி விளங்குகிறார்.
சிஎஸ்கேவை இதுவரை 8 முறை இறுதிச்சுற்றுக்கு அழைத்துச் சென்று மூன்று முறை கோப்பை பெற்றுக்கொடுத்துள்ளார்.
இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடரிலும் டோனி பங்கேற்கிறார்.
அவர் குறித்து சிஎஸ்கே அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் கூறுகையில், டோனி தற்போது சென்னையில் தான் இருக்கிறார். ஐபிஎல் 14ஆவது சீசனுக்காக கடுமையாகப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
டோனி கிரிக்கெட்டை அதிகம் நேசிக்கிறார், அவர் அனைத்து விடயங்களிலும் சரியாகச் செயல்படுபவர். அதனால் தான் அவரை எங்களுக்கு பிடித்திருக்கிறது என கூறியுள்ளார்.