கொழும்பு – ப்ளுமெண்டல் பகுதியில் இரண்டு சந்தேக நபர்களிடமிருந்து ஏழு ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன .
குறித்த இருவரும், போலி ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்களை வழங்கி, வர்த்தக நிலையம் ஒன்றில் பொருட்களைக் கொள்வனவு செய்ய முயற்சித்துள்ளனர்.
இதன்போது சந்தேகமடைந்த குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர், காவல்துறையில் முறையிட்டதற்கமைய, அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள், வெல்லம்பிட்டி மற்றும் முகத்துவாரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.