மோட்டார் சைக்கிள்களின் மூலம் இடம்பெறும் விபத்துக்களை தடுக்கும் நோக்கில் விசேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நான்கு நாட்கள் விசேட சோதனை நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொள்ள உள்ளனர்.
இன்றைய தினம் முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ம் திகதி வரையில் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மோட்டார் சைக்கிள் சாரதிகள் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்றைய தினம் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 8 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துக்களில் மூன்று பேர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் எனவும் இரண்டு பேர் பாதசாரிகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.