அரிய வகை ஆந்தை ஒன்று வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் உயிருடன் மீட்கப்பட்டது.
புத்தளம் மணல்தீவு பகுதியில் காயங்களுக்குள்ளான நிலையில் (Burn Owl) எனப்படும் அரிய வகை ஆந்தை ஒன்று மரத்திலிருந்து கீழே வீழ்ந்த அவதானித்த நபரொருவர் குறித்த ஆந்தையை மீட்டு வைத்திருந்த நிலையில் புத்தளம் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவலை வழங்கியுள்ளார்.
இந்நிலையில் குறித்த ஆந்தையை மீட்டு காயஙகளுக்குள்ளான ஆந்தையை சிகிச்சையளிப்பதற்காக நிக்காவெரெட்டிய மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.