இலங்கையில் மேலும் சில பகுதிகளை உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஹிங்குரன்கொட − சிறிகொத்த கிராம சேவகர் பிரிவு மற்றும் மாத்தளை − உக்குவளை − பல்லேகும்புர கிராம சேவகர் பிரிவு ஆகியன உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.