அதிகரித்து வரும் கொரோனா தொற்றை அடுத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான இடவசதிகள் தொடர்பில் அச்சப்பட வேண்டாமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலைகளில் இடநெருக்கடி ஏற்பட்டால் சுற்றுலா ஹோட்டல்களை கொவிட் 19 சிகிச்சை மையங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
அத்துடன் வைத்தியசாலைகளில் கொவிட் 19 சிகிச்சைகளுக்காக வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.