தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவில், கமலின் மக்கள் நீதி மய்யம் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது.
கடந்த 6-ஆம் திகதி தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்க்ள் நீதி மய்யம் கட்சியும் போட்டியிட்டது.
ஆனால் 234 தொகுதிகளிலும் போட்டியிடாமல் நேரடியாக கமலின் மக்கள் நீதி மய்யம் 154 இடங்களிலும், அதனுடன் கூட்டணி வைத்த இந்திய ஜனநாயக கட்சி தலா 40 இடங்களிலும் சமத்துவ மக்கள் கட்சி தலா 40 இடங்களிலும் போட்டியிட்டன.
ஆனால் எந்த ஒரு இடத்திலும் மக்கள் நீதி மய்யம் வெற்றி பெறவில்லை. கோவை தெற்கு தொகுதியில் மட்டும் கமல்ஹாசன் கடும் போட்டி கொடுத்தார். இருப்பினும் இறுதியில் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
இந்த தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் 10,58,847 வாக்குகளை பெற்று, வாக்கு சதவீதம் அடிப்படையில் 8-வது இடத்திலும், 2.45 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது.
இதற்கு முந்தைய இடத்தில்(7-வது இடம்) டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி, 2.47 சதவீதம் ஓட்டுக்களை பெற்றுள்ளது.