• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் உலகச் செய்திகள் சுவிஸ் செய்திகள்

சுவிற்சர்லாந்தில் மேலும் கட்டுப்பாடுகள் நீக்கம்! – அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

Editor1 by Editor1
May 13, 2021
in சுவிஸ் செய்திகள்
0
சுவிற்சர்லாந்தில் மேலும் கட்டுப்பாடுகள் நீக்கம்! – அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

இன்னும் இரண்டு கிழமைகளில் நிலவும் நோய்த்தொற்றுச் சூழலிற்கு அமைய புதிய தளர்வுகளை சுவிற்சர்லாந்து அறிவிக்கலாம் என சுகாதார அமைச்சர் அலான் பெர்சே 12. 05. 21 ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்தார்.

31. 05. 21 அறிவிக்கப்படக்கூடிய புதிய தளர்வுகள் சுருக்கமாக,

மீண்டும் திறக்கப்படலாம்

உணவகங்கள் மற்றும் மதுநிலையங்கள் உள்ளரங்கில் (கட்டடத்திற்குள்) விருந்தினர்களை அனுமதிக்கலாம். சுடுநீர்த்தடாகம் மற்றும் நலவாழ்வுக் குளியல் நிலையம் என்பன திறக்கப்படலாம்.

பொது நிகழ்வுகள்

இதுவரை 50 ஆட்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதி வரம்பு 100ஆக உயர்த்தப்படலாம். வெளியரங்கில் 100 ஆட்கள் பொது நிகழ்விற்கு ஒன்றுகூடலாம் எனும் வரம்பு 300ஆக உயர்த்தப்படலாம்.

உயர்பாடசாலைகள்

நேரடியாக நடைபெறும் வகுப்புக்களில் ஆகக்கூடியது 50 ஆட்கள் எனும் தடை நீக்கப்படலாம். இதற்கு உரிய காப்பமைவு வரையப்படவேண்டும் என்பது கட்டுநிலை (நிபந்தனை) ஆகும்.

வீடுகளில் இருந்தபடிபணி

வீட்டில் இருந்தபடி பணி ஆற்ற வாய்ப்பு அமையும் எனின் அதனைத் தொடர்வது என்பது இதுவரை கட்டாயமாக இருந்தது. ஆனால் இது இப்போது வெறும் முன்மொழிவாகின்றது. இதன்படி பணியாளர்கள் நேரில் பணி ஆற்றலாம். கிழமைக்கு ஒரு நோய்த்தொற்றுப் பரிசோதனை செய்துகொண்டால்போதும்.

குறுநேரப்பணி

நிறுவனங்கள் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பாது அவர்களைத் தொடர்ந்து வேலை ஒப்பந்தத்தில் வைத்துக்கொண்டு குறைந்தநேரப்பணி அளித்து 80வீத ஊதியமும் அல்லது 80 வீத ஊதியத்துடன் விடுப்பளித்து வருகின்றது.

இதற்கு சுவிற்சர்லாந்து நடுவன் அரசு மானிய ஈடு வழங்கி வருகின்றது. இதன் உதவிக்காலத்தை 24 மாதங்களாக உயர்த்துமாறு சுவிற்சர்லாந்துப் பாராளுமன்றமும் பொருளாதார-, கல்வி மற்றும் ஆய்வுத்திணைக்கழகங்கள் வேண்டியிருந்தன.

சுவிஸ் அரசு இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது. இதன்படி மகுடநுண்ணிப் பெருந்தொற்று (கோவிட் 19) தொடங்கிய காலம் முதல் ஆகக்கூடியது 24 மாதங்களுக்கு தொழிலகங்களால் குறுநேரப்பணியில் ஈடுபடுத்தப்படும் பணியாளர்களுக்கு ஈடு வழங்க சுவிற்றசர்லாந்து அரசு முடிவெடுத்துள்ளது.

தொடரும் நடைமுறைகள்

அனைவரும் தொடர்ந்து நோய்த்தொற்று நலவாழ்வு முறைமைகளைக் கடைப்பிடிப்பதுடன், முகவுறை அணியவேண்டும், உரிய இடைவெளி பேணவேண்டும்.

இரண்டு கிழமைகளில் இறுதி முடிவு

இன்றைய முன்னறிவிப்புக்கள் மாநில அரசுகளுக்கும், பாராளுமன்றக் குழுக்களுக்கும் சமூகப்பங்காளர்களான நிறுவனங்களுக்கும் கலந்தறிந்து அறிவுரை பெறுவதற்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.

உணவகங்கள்

நோய்த்தொற்றுச்சூழல் கட்டுக்குள் இருக்குமானால் 31.05.21 திங்கள் முதல் உணவகங்களின் உள்ளிடங்களிலும் விருந்தினர்கள் இருக்க அனுமதிக்கப்படுவர். ஒரு மேசைக்கு ஆகக்கூடியது 4வர் என அனுமதி அளிக்கப்படும். விருந்தினர்களது தரவுகள் பதியப்பட வேண்டும். புதிய வரையறையாக 100 ஆட்கள் வரை உள்ளரங்கில் இருக்கையில் இருக்கலாம்.

நிகழ்வுகள்

பொதுநிகழ்வுகளில் பங்கெடுக்கும் ஆட்களின் தொகை கூட்டப்படுகின்றது. இதன் படி இதுவரை 50 ஆட்களுக்கு அளிக்கப்பட்ட ஒப்புதல் புதிதாக 100ஆக உயர்த்தப்படுகின்றது.

இது தொழில்சாராத விளையாட்டுப் பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கும் செல்லுபடியாகும். இதுவரை வெளியில் 15 ஆட்கள் இணைந்து விளையாட்டில் ஈடுபடலாம் என இருந்தது. புதிய அறிவிப்பின்படி இது 30ஆக உயர்த்தப்படலாம்.

பண்பாடு

பண்பாட்டு செயற்பாடுகளில் குழுநிலை ஆட்கள் தொகை 30ஆக உயர்த்தப்படுகின்றது. ஒத்திகை மற்றும் மேடை நிகழ்வு என்பவற்றில் பங்கெடுக்கும் ஆட்கள் தொகை உள்ளரங்கிலும் வெளியிரங்கிலும் 50 என உயர்த்தப்படும்.

ஊதுவாத்தியக் கருவிகளுக்கு இதுவரை 25 சதுர மீற்றருக்கு இடைவெளி அறிவிக்கப்பட்டது அது 10 சதுரமீற்ரர் ஆகக் குறைக்கப்படுகின்றது. வெளியரங்கில் மட்டும் குழுவிசை மீண்டும் அனுமதிக்கப்படும்.

விளையாட்டு

அணிகளுக்கிடையிலான தேசிய மற்றும் உள்ளூர் சுற்றுப்போட்டிகளில் குழுவின் அளவு 50 ஆக உயர்த்தப்படும். இவ்வகை விளையாட்டுப் போட்டிகள் வெளியரங்கில் மட்டும் அனுமதிக்கப்படும். ஆரவாரமற்ற அமைதியான விளையாட்டுக்கள் உள்ளரங்களில் 15 ஆட்கள் ஒருவருக்கு 10 சதுர மீற்ரர் எனும் அளவில் அனுமதிக்கப்படுவர்.

தனிமைப்படுத்தல்

நோயில் இருந்து நலமடைந்தோர், தடுப்பூசி இட்டுக்கொண்டவர்கள் பயணத்தடை மற்றும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவர்.

எவ்வகை தடுப்பூசிக்கு எவ்வகை விதிவிலக்குகள் அளிக்கப்படும் என்பது இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. 16 வயதிற்கு உட்பட்டோர் அனைவருக்கும் பயணக்கட்டுப்பாட்டு தனிமைப்படுத்தல் விதி முழுமையாக நீக்கப்படும்.

நீச்சல்

சுடுநீர்த்தடாகம் மற்றும் நலன்பேணும் குளியல்நிலையங்கள் என்பன தொற்றுத் தொகை குறைவதற்கு அமையவும், மருத்துவமனைகளின் பழுக்குறைவிற்கு, உற்றுழி (தீவிரிசிகிச்சை) படுக்கைகள் பயன்பாட்டுக் குறைவிற்கு அமையவும் ஆயப்பட்டு முடிவெடுக்கப்படும்.

முகவுறை அற்று நீச்சலில் ஈடுபடலாம், ஆனால் போதியளவு இடைவெளி பேணப்படவேண்டும். ஒருவருக்கு 15 சதுரமீற்றர் அளவு கணக்கிடப்பட வேண்டும்.

மூன்றுகட்ட நிலைகள்

பாதுகாப்புக்கட்டம்

இன்றைய அறிவிப்பின்படி சுவிற்சர்லாந்து அரசு தனது நோய்த்தடுப்பு மற்றும் முடக்கத் தளர்வு மூலோபாயமாக மூன்றுகட்ட நிலைகளை தேர்வு செய்துள்ளது.

இதன்படி முதற்கட்டம் இம்மாத நிறைவுக்குள் தடுப்பூசி இட்டுக்கொள்ளத் தயாராக உள்ள அனைவருக்கும் ஊசி இடுவது, இக்கட்டத்தை பாதுகாப்பு கட்டமாக சுவிஸ் அரசு அறிவித்துள்ளது.

நிலையானகட்டம்

பாதுகாப்பு கட்டத்திற்கு அடுத்து நிலையான கட்டமாக ஊசி இடப்பட்ட பின்னர் முடக்கத் தளர்வுகளை மெல்ல நீக்கி திறக்கப்பட படிநிலைநோக்கி நகர்வது ஆகும். இன்றைய கலந்தாய்விற்குப்பின் 31.05.21 முதல் இப்படி நிலைநோக்கி சுவிஸ் நகரவுள்ளது.

இயல்புநிலை திரும்புதல்

தடுப்பூசியிட விரும்புவோர் அனைவருக்கும் தடுப்பூசி இட்ட பின்னர், நோய்ப் பெருந் தொற்று சுழல் கட்டுக்குள் வந்தவுடன், மகுடநுண்ணி தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் நீக்கக்கூடிய சூழல் அமையும்போது அதனை இயல்புநிலை திரும்பும் நிலையாக சுவிஸ் அரசு கருதுகின்றது.

இதனையே சுவிற்சர்லாந்து அரசு தனது அடைவு இலக்காக தீர்மானித்துள்ளது.

Previous Post

அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் அடைபட்டிருக்கும் இலங்கை தமிழ் சிறுமிகளின் கதை!

Next Post

அதிகாலையில் பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூடு! பிரபல பாதாள உலக குழு உறுப்பினர் பலி

Editor1

Editor1

Related Posts

உலக அரங்கில் சுவிசிற்கு கிடைத்த அங்கீகாரம்!
உலகச் செய்திகள்

உலக அரங்கில் சுவிசிற்கு கிடைத்த அங்கீகாரம்!

September 18, 2025
சுவிசில் மாமியாருக்கு அதிர்ச்சி கொடுத்த மருமகன் !பொலிஸ் நிலையம் சென்ற மனைவி!
உலகச் செய்திகள்

சுவிசில் மாமியாருக்கு அதிர்ச்சி கொடுத்த மருமகன் !பொலிஸ் நிலையம் சென்ற மனைவி!

August 19, 2025
சுவிசில் அதிவேகமாக வாகனம் செலுத்தியவருக்கு அபராதம்!
உலகச் செய்திகள்

சுவிசில் அதிவேகமாக வாகனம் செலுத்தியவருக்கு அபராதம்!

August 13, 2025
சுவிட்சர்லாந்தில் ரவுடி இடையே  குழு மோதல் இலங்கையர் பலி!
இலங்கைச் செய்திகள்

சுவிட்சர்லாந்தில் ரவுடி இடையே குழு மோதல் இலங்கையர் பலி!

August 12, 2025
சுவிசில் பதிவான வன்முறை சம்பவம் இலங்கையர் பலி!
உலகச் செய்திகள்

சுவிசில் பதிவான வன்முறை சம்பவம் இலங்கையர் பலி!

August 10, 2025
சுவிசில் விடுதலைப் புலிகளின் தலைவருக்கு வீர வணக்க நிகழ்வு!
உலகச் செய்திகள்

சுவிசில் விடுதலைப் புலிகளின் தலைவருக்கு வீர வணக்க நிகழ்வு!

August 3, 2025
Next Post
அதிகாலையில் பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூடு! பிரபல பாதாள உலக குழு உறுப்பினர் பலி

அதிகாலையில் பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூடு! பிரபல பாதாள உலக குழு உறுப்பினர் பலி

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

December 9, 2025
பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!

பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!

December 9, 2025
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

December 9, 2025
3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை

3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை

December 9, 2025

Recent News

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

December 9, 2025
பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!

பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!

December 9, 2025
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

December 9, 2025
3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை

3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை

December 9, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy