கிளிநொச்சி, டீ3 கோவிந்தன் கடைச்சந்தி இரணைமடு நீர்ப்பாசன வாய்க்காலில் ஆணொருவரின் சடலமொன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக அடையாளம் காணப்பட்டவர் கிளிநொச்சி திருவையாறு வில்சன் வீதியைச் சேர்ந்த கே.ரமேஸ்குமார் வயது 30 எனத் தெரிவிக்கப்படுகின்றது.
தனியார் வீதி அபிவிருத்தி நிறுவனம் ஒன்றில் வீதி புனரமைப்பு பணியில் ஈடுபடுபவர் எனவும், நேற்று (24) மாலை குளிப்பதற்காக வாய்க்காலில் இறங்கிய போது மரணித்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன்,மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



















