கிழக்கில் தொல்லியல் மரபுரிமைகளை பாதுகாப்பதற்காக ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட 11 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் ஓர் புதிய பரிமாணம் என வெளிப்படையாக தென்பட்டுள்ளது.
இதன் காரணம் புலம்பெயர்ந்துள்ள ஈழத்தமிழர் என்றால் மிகையாகாது, காரணம் 2009 வரைக்கும் வடக்கு கிழக்கு பகுதிக்கு சம அளவில் இருந்து வந்த பாதுகாப்பு தளம் தளர்த்தப்பட்ட பின்னர் புலம்பெயர்ந்த சமூகத்தின் திட்டமிடல் இல்லாது செயற்பாட்டினால் வரலாற்று ரீதியாக பாதுகாக்கப்பட்டு கிழக்கு மண் முற்றாக இழக்கப்படும் அபாயமான நிலை,
புலம்பெயர்ந்தவர்களில் அதிகமானவர்கள் வடமாகாணத்தை சேர்ந்தவர்கள், அவர்களின் முதலீடுகள் வடக்கு மாகாணத்தை மையப்படுத்தியுள்ளதுடன் கிழக்கு வாழ் மக்கள் நூறில் ஏழு பேர் வீதம் மட்டுமே வளர்முக நாடுகளில் உள்ளனர்,


















