கொழும்பு துறைமுகத்தில் தீ விபத்தினால் முழுமையாக எரிந்து வரும் எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பலில் இருந்து கரை ஒதுங்கி பொருட்களை சேகரித்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் சிலர் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் இணைந்து, முனுகமுவ, துன்கல்பிட்டிய, நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை ஆகிய பிரதேசங்களில் கடற்கரைக்கு அருகில் உள்ள பிரதேசங்களில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொளள்ப்பட்டுள்ளது.
கரை ஒதுங்கிய பொருட்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றையும் பொலிஸார் தங்கள் பொறுப்பில் எடுத்து சென்றுள்ளனர்.
கரை ஒதுங்கும் பொருட்கள் இரசாயனம் மிக்கதென்பதனால் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என மக்களுக்கு எச்சரிக்கப்பட்ட நிலையிலும் அங்கிருந்தவர்கள் இதனை கொண்டு சென்றுள்ளனர்.