• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home ஆரோக்கியம்

கொரோனா 3-வது அலையில் இருந்து தப்ப சித்த மருத்துவ வழிமுறைகள்

Editor1 by Editor1
July 2, 2021
in ஆரோக்கியம்
0
கொரோனா 3-வது அலையில் இருந்து தப்ப சித்த மருத்துவ வழிமுறைகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை முடிவுக்கு வரும் நிலையில், 3-வது அலை எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று மருத்துவ துறையினர் கூறி வருகிறார்கள்.

 

 

 

 

தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 3-வது அலையை எதிர்கொள்ளும் வகையில் படுக்கைகள் தயாராக உள்ளன. குறிப்பாக கொரோனா 3-வது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்கிற தகவல் வைரலாகி இருக்கிறது.

அதே நேரத்தில் 2-வது அலையிலேயே குழந்தைகளை கொரோனா தொற்று அதிகம் பாதித்துள்ளதாகவும், 3-வது அலையில் தனியாக எந்தவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. பெரியவர்களை போன்றே குழந்தைகளையும் கொரோனா தாக்குவதற்கு வாய்ப்புள்ளது என்கிற கருத்தும் நிலவுகிறது.
கைகொடுத்த சித்த மருத்துவம்

கடந்த காலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு பெரிதும் கைகொடுத்தது சித்த மருத்துவம் என்றால் அதனை யாரும் மறுக்கமாட்டார்கள். அந்த அளவுக்கு தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று நோயாளிகளுக்கு சிறப்பான சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

முதல் அலையிலும் சரி, 2-வது அலையிலும் சரி கொரோனா நோயாளிகள் பலர் பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவத்தால் குணம் அடைந்துள் ளனர். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு தற் போது மருந்து, மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா 2-வது அலை தாக்குதலின் போதும் நோயாளிகள் நலன் கருதி தமிழக அரசு சித்த மருத்துவ சிறப்பு மையங்களை தொடங்கி இருக்கிறது. சென்னையில் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி, வேப்பேரி பெரியார் மையம், போரூர் வெங்கடேஸ்வரா கல்லூரி, மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கல்லூரி, சூரப்பட்டு வேலம் மாள் கல்லூரி ஆகிய 5 இடங்களில் சித்த மருத்துவ சிறப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகம் முழு வதும் 50 மையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு கொரோனா நோயாளி களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்திய மருத்துவத்துறை இயக்குனர் கணேஷ், இணை இயக்குனர் பேராசிரியர் பார்த்திபன் ஆகியோரது ஆலோசனையின்படி டாக்டர்கள் பிச்சையாகுமார், சசிகுமார் ஆகியோரை ஒருங்கிணைப்பாளராக கொண்டு இந்த மையங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கொரோனா 3-வது அலையில் இருந்து பொது மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள இப்போதே தகுந்த முன்னெச்சரிக்கையோடு செயல் பட வேண்டும் என்கிறார் சென்னை அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரி விரிவுரையாளரான சாய் சதீஷ். இவர் மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் உள்ள சித்த மருத்துவ மையத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது, ‘‘கொரோனா 3-ம் அலையில் முன்னெச்சரிக்கையே முதல் மருந்தாகும், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வரும் காலங்களில் மிகுந்த கவனத்தோடு பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக அவர்கள் சாப்பிடும் உணவு வகைகளிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை அவர்களுக்கு அதிகமாக கொடுக்க வேண்டும். அப்போதுதான் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இந்த வைரஸ் தொற்று காலத்தில் அனைவரும் வயிறு உபாதைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் நாம் பழங்களை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். மாதுளை, சாத்துக்குடி, எலுமிச்சை, அத்தி, வாழைப் பழங்களை அதிகம் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

குழந்தைகள், பெரியவர்களை போல பொறுமையாக மென்று சாப்பிட மாட்டார்கள். இதனால் சில நேரங்களில் அவர்களுக்கு செரிமான பிரச்சினை ஏற்படும். தறபோதுள்ள சூழலில் உடலில் செரிமான பிரச்சினை ஏற்படாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக சித்த மருத்துவத்தில் உரை மாத்திரை குழந்தைகளுக்கான நல்ல செரிமான மருந்தாக உள்ளது.

பெரியவர்களும் இதை சாப்பிடலாம். சிறிய அளவிலான உரை மாத்திரையை எடுத்து அதில் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அதுபோன்று தொடர்ந்து 6 மாதங்கள் இந்த மாத்திரையை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் செரிமான பிரச்சினை வராது.

உரை மாத்திரையில் அதிமதுரம், வசம்பு, ஜாதிக் காய், கடுக்காய், பூண்டு, திப்பிலி, பெருங்காயம், இஞ்சி, அக்ர ஹாரம் உள் ளிட்ட 10 மருத்துவ பொருட்கள் அடங்கி உள்ளது. இதனால் உடலுக்கு எந்த கேடும் ஏற்படாது. எனவே குழந்தைகளுக்கு தயங்காமல் இந்த உரை மாத்திரையை கொடுத்து வரலாம். இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும். கொரோனா தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கு இது உதவும்.

அதே நேரத்தில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமலும் இந்த நேரத்தில் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். இதுதவிர சித்த மருத்துவ மருந்துகளான தாளிசாதி சூரண மருந்தையும் தேனில் கலந்து சாப்பிடலாம்.

பூண்டு தேன் குழந்தைகளுக்கு நல்ல மருந்தாகும். இதனை வீட்டிலேயே தயாரிக்கலாம். 5 மில்லி பூண்டு தண்ணீரில் தேன் கலந்து தொடர்ந்து குழந்தைகளுக்கு கொடுத்து வருவதன் மூலம் மூச்சுப்பாதையில் எந்தவித சுவாச பிரச்சினைகளும் ஏற் படாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

இந்த வைரஸ் தொற்று காலத்தில் குழந்தைகள் வயிற்றில் மந்தநிலையை ஏற்படுத்தும் பழங்களை தவிர்க்க வேண்டும். மாம் பழம், பலாப்பழம் ஆகிய வற்றை அதிகமாக குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது. இதன் மூலம் செரிமான பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.

தினமும் காலை வெயிலில் 5 நிமிடம் குழந்தைகளை நிற்க வைப்பது நல்லது. இதன் மூலம் வைட்டமின் ‘டி’ சத்து கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதற்கு வைட்டமின் சத்து மிகவும் அவசியமானதாகும்.

இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மேற்கொண்டால் நிச்சயம் கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் சித்தா டாக்டர் சாய்சதீஷ் தெரிவித்துள்ளார்.

உஷாராக இருப்போம்…
கொரோனாவை விரட்டுவோம்…

சித்த மருத்துவம் தொடர்பாக
உங்களுக்கு என்ன தகவல் வேண்டும்?
7358723063-க்கு
போன் செய்யுங்கள்

சித்த மருத்துவம் தொடர்பாக உங்களுக்கு என்ன தகவல் வேண்டும்? உங்களது அத்தனை சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை அளிக்க காத்து இருக்கிறது ஒருங்கிணைந்த சித்த மருத்துவ கட்டளை மையம். 7358730363- என்ற எண்ணை தொடர்பு கொண்டால் சித்த மருத்துவம் தொடர்பாக தேவையான தகவல்களை பெறலாம். இந்த எண் காலை 8மணியில் இருந்து இரவு 8 மணி வரை செயல்படும்.

Previous Post

கொழுப்பு கட்டி உடலில் பாதிப்பை ஏற்படுத்துமா?

Next Post

போதை விருந்தில் கலந்துகொண்ட கவர்ச்சி நடிகை கைது

Editor1

Editor1

Related Posts

சிறுநீர் கழிக்கும் போது இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கிட்னி பத்திரம்
ஆரோக்கியம்

சிறுநீர் கழிக்கும் போது இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கிட்னி பத்திரம்

October 27, 2025
ஒருவர் கொட்டாவி விடுவதை பார்த்தால் நமக்கு ஏன் கொட்டாவி வருகிறது?
ஆரோக்கியம்

ஒருவர் கொட்டாவி விடுவதை பார்த்தால் நமக்கு ஏன் கொட்டாவி வருகிறது?

October 19, 2025
மூளை எப்போது தூக்குகிறது? பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்!
ஆரோக்கியம்

மூளை எப்போது தூக்குகிறது? பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்!

October 8, 2025
கறிவேப்பிலை நீண்ட நாட்களுக்கு ஃப்ரெஷ்ஷாவே இருக்கணுமா? இத மட்டும் பண்ணுங்க
ஆரோக்கியம்

கறிவேப்பிலை நீண்ட நாட்களுக்கு ஃப்ரெஷ்ஷாவே இருக்கணுமா? இத மட்டும் பண்ணுங்க

October 8, 2025
வயிறு உப்பிச பிரச்சினைக்கு இது சாப்பிடுங்க போதும்!
ஆரோக்கியம்

வயிறு உப்பிச பிரச்சினைக்கு இது சாப்பிடுங்க போதும்!

September 28, 2025
நாள்பட்ட நெஞ்சு சளியை போக்க!
ஆரோக்கியம்

நாள்பட்ட நெஞ்சு சளியை போக்க!

September 26, 2025
Next Post
போதை விருந்தில் கலந்துகொண்ட கவர்ச்சி நடிகை கைது

போதை விருந்தில் கலந்துகொண்ட கவர்ச்சி நடிகை கைது

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
ஒரே வாரத்தில் 22,000 ரூபாயால் அதிகரித்துள்ள தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்

ஒரே வாரத்தில் 22,000 ரூபாயால் அதிகரித்துள்ள தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்

December 27, 2025
உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சர்களின் பணம் – அநுரவை சீண்டும் நாமல் எம்.பி.

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சர்களின் பணம் – அநுரவை சீண்டும் நாமல் எம்.பி.

December 26, 2025
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்

வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்

December 26, 2025
கிளிநொச்சியில் விபத்தில் பலியான தாய் – குழந்தை நினைவாக பேருந்து நிழற்குடை

கிளிநொச்சியில் விபத்தில் பலியான தாய் – குழந்தை நினைவாக பேருந்து நிழற்குடை

December 26, 2025

Recent News

ஒரே வாரத்தில் 22,000 ரூபாயால் அதிகரித்துள்ள தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்

ஒரே வாரத்தில் 22,000 ரூபாயால் அதிகரித்துள்ள தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்

December 27, 2025
உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சர்களின் பணம் – அநுரவை சீண்டும் நாமல் எம்.பி.

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சர்களின் பணம் – அநுரவை சீண்டும் நாமல் எம்.பி.

December 26, 2025
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்

வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்

December 26, 2025
கிளிநொச்சியில் விபத்தில் பலியான தாய் – குழந்தை நினைவாக பேருந்து நிழற்குடை

கிளிநொச்சியில் விபத்தில் பலியான தாய் – குழந்தை நினைவாக பேருந்து நிழற்குடை

December 26, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy