அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் டெல்டா வகை கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
புளோரிடா மாகாணத்தில் மாஸ்க் அணிவதும் தடுப்பூசி போட்டுக் கொள்வதும் கட்டாயம் இல்லை என்று அம்மாகாண கவர்னர் அறிவித்துள்ள நிலையில், அமெரிக்காவில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளில் சுமார் 25 சதவீதம் பேர் புளோரிடாவில் உள்ளது தெரியவந்துள்ளது.
தொற்று அதிகரித்து வருவதால் கார்களில் வரிசையாக வரும் மக்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்கின்றனர்.