• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home ஆன்மீகம்

சாபம் பெற்று பூமி வந்த நந்தி

Editor1 by Editor1
August 23, 2021
in ஆன்மீகம்
0
சாபம் பெற்று பூமி வந்த நந்தி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நந்தியும், சிவனும் பிரிக்க முடியாத சக்திகள். அப்படிப்பட்ட நந்தியே, ஒரு முறை கயிலாயத்தில் இருந்து ஈசனை பிரிந்து பூலோகம் வரும் நிலை ஏற்பட்டது. அந்தக் கதையைப் பார்ப்போம்…

சிவாலயங்களுக்குச் சென்று வழிபடுபவர்கள், அங்கிருக்கும் நந்தியை தரிசனம் செய்யாமல் வரமாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால், நந்தியை தரிசித்து அவரிடம் அனுமதி பெற்ற பிறகே, நாம் ஈசனை வணங்க வேண்டும் என்பது வழிமுறை. அந்த வகையில் நந்தியும், சிவனும் பிரிக்க முடியாத சக்திகள். அப்படிப்பட்ட நந்தியே, ஒரு முறை கயிலாயத்தில் இருந்து ஈசனை பிரிந்து பூலோகம் வரும் நிலை ஏற்பட்டது. அந்தக் கதையைப் பார்ப்போம்.

சிவ பக்தனான அடிலகன் என்பவன், தன் இறுதிகாலம் முடிந்து கயிலாயம் சென்றான். அங்கே பார்வதிதேவி, சிவபெருமானை நினைத்து தியானம் செய்து கொண்டிருந்தாள். கயிலாய வாசலில் நந்தியம்பெருமான் காவல் புரிந்து கொண்டிருந்தார். சிவ-பார்வதியை தரிசிக்க நினைத்து வந்த அடிலகன், நேராக பார்வதி தவம் செய்து கொண்டிருந்த இடத்திற்குச் சென்றான். நந்திதேவரும், ஈசனின் பக்தன்தானே என்று அவனை உள்ளே விட்டு விட்டார்.

அடிலகன் உள்ளே சென்றதும், பார்வதியைக் கண்டு “தாயே..” என்று பெருங்குரலெடுத்து வணங்கினான். அந்த சத்தத்தில் பார்வதியின் தியானம் கலைந்தது. பக்தனை கடிந்துகொள்ள இங்கே வழியில்லை. அதனால் தன் பணியை சரிவர செய்யாத நந்தியை அழைத்தாள், பார்வதி. “நான் தியானத்தில் இருந்து எழுந்ததும், பக்தனை உள்ளே அனுமதித்திருக்கலாம். நீ உன்னுடைய பணியை முறையாகச் செய்யவில்லை” என்று கடிந்துகொண்டாள். அப்போது அங்கு வந்த ஈசன், நடந்ததை அறிந்துகொண்டு, “நந்தி.. பணியில் இருந்து தவறிய நீ.. பூலோகத்தில் பிறந்து சிலகாலம் வாழ்வாயாக” என்று சாபம் அளித்துவிட்டார்.

அந்த நேரத்தில் பூமியில் சிலாதர் என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். அவரது ஆசிரமத்திற்கு ஒரு முறை சப்தரிஷிகளும் வந்தனர். அவர்களுக்கு சிலாதரின் மனைவி உணவு பரிமாறினாள். ஆனால் சப்தரிஷிகளும், “குழந்தை இல்லாத வீட்டில் துறவிகள் உண்ணக்கூடாது” என்று கூறி அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இதனால் வருத்தம் அடைந்த சிலாதரும், அவரது மனைவியும், இறைவனிடம் மனமுருக வேண்டினர். இதனை அறிந்த ஈசன், நந்தியம்பெருமானை, அவர்களின் புதல்வனாக்க முடிவு செய்தார். அதன்படி நந்தியை ஒரு பெட்டியில் வைத்து பூட்டி சிலாதரின் ஆசிரமம் அருகே வைத்துவிட்டார். சிலாதரின் கண்ணில், அந்தப் பெட்டி தென்பட்டது. அவர் அதைத் திறந்து பார்த்தபோது, காளையின் முகம், மனித உடல் கொண்ட ஒரு குழந்தை அதற்குள் இருந்தது.

இறைவன் தனக்கு அளித்த பிள்ளை என்று கருதிய சிலாதர், “இறைவா.. நற்குழந்தை ஒன்றை தந்திருக்கக் கூடாதா? காளை முகம் கொண்ட குழந்தையை ஊரார் எப்படி ஏற்பார்கள்?” என்று ஈசனிடம் வேண்டினார்.

அப்போது அங்கே ஒரு அசரீரி ஒலித்தது. “சிலாதா.. வந்திருப்பது என்னுடைய காவலன் நந்தி. ஒரு சாபத்தால் அவன் உன்னிடம் வளர வந்துள்ளான். அவனுக்கு அழகான முகம் தருகிறேன். ஆனால் அவனுடைய ஆயுள் காலம் வெறும் 12 ஆண்டுகள்தான் இருக்கும். அதன் பிறகு அவனோடு நீங்களும் கயிலாயம் வந்துவிடுங்கள்.”

அதைக்கேட்ட சிலாதர், தன் பிள்ளையின் ஆயுள் குறைவு என்றாலும், அவன்தான் நம்மை கயிலாயம் அழைத்துச் செல்லப்போகிறான் என்ற மகிழ்ச்சியில் அதனை ஏற்றுக்கொண்டார்.

தன் மனைவியிடம் குழந்தையை ஒப்படைத்தார். சிவலோகத்தில் இருந்து கிடைத்த பிள்ளை என்பதால், அந்தக் குழந்தை பார்த்தவுடன், பலரின் நோய் நீங்கியது. பலரது பாவம் பறந்தோடியது. நந்தி தேவர், தினமும் பிரதோஷ வேளையில் தியானத்தில் ஈடுபடுவார். தான் வாழ்ந்த 12 ஆண்டுகளில் பல அற்புதங்களை நிகழ்த்திய நந்தியம்பெருமான், தன் பெற்றோருடன் கயிலாயம் சென்று, இழந்த பதவியை மீண்டும் பெற்றார்.

Previous Post

அத்தியாவசியமான மருந்துகள் சிலவற்றின் விலை அதிகரிப்பு!

Next Post

எதிரிகளை பலமிழக்கச் செய்வாள் பிரத்யங்கிரா தேவி

Editor1

Editor1

Related Posts

ஆயுத பூஜை வழிபடுவதற்கான நல்ல நேரம்!
ஆன்மீகம்

ஆயுத பூஜை வழிபடுவதற்கான நல்ல நேரம்!

October 1, 2025
துலாம் ராசிக்கு அடுத்தடுத்து கிடைக்கும் ஜாக்போட்
ஆன்மீகம்

துலாம் ராசிக்கு அடுத்தடுத்து கிடைக்கும் ஜாக்போட்

September 25, 2025
நம்பினோருக்கு விசுவாசமாக இருக்கும் ராசியினர்
ஆன்மீகம்

நம்பினோருக்கு விசுவாசமாக இருக்கும் ராசியினர்

September 23, 2025
பணத்தை தாறுமாறாக செலவு செய்யும் ராசியினர்!
ஆன்மீகம்

பணத்தை தாறுமாறாக செலவு செய்யும் ராசியினர்!

September 21, 2025
ருச்சக ராஜ யோகத்தால் அதிஷ்டம் பெறும் ராசிகள்
ஆன்மீகம்

ருச்சக ராஜ யோகத்தால் அதிஷ்டம் பெறும் ராசிகள்

September 18, 2025
ருத்ராட்சத்தை எங்கு அணிவதால் நன்மை கிடைக்கும் தெரியுமா?
ஆன்மீகம்

ருத்ராட்சத்தை எங்கு அணிவதால் நன்மை கிடைக்கும் தெரியுமா?

September 14, 2025
Next Post
எதிரிகளை பலமிழக்கச் செய்வாள் பிரத்யங்கிரா தேவி

எதிரிகளை பலமிழக்கச் செய்வாள் பிரத்யங்கிரா தேவி

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
ஒரே வாரத்தில் 22,000 ரூபாயால் அதிகரித்துள்ள தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்

ஒரே வாரத்தில் 22,000 ரூபாயால் அதிகரித்துள்ள தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்

December 27, 2025
உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சர்களின் பணம் – அநுரவை சீண்டும் நாமல் எம்.பி.

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சர்களின் பணம் – அநுரவை சீண்டும் நாமல் எம்.பி.

December 26, 2025
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்

வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்

December 26, 2025
கிளிநொச்சியில் விபத்தில் பலியான தாய் – குழந்தை நினைவாக பேருந்து நிழற்குடை

கிளிநொச்சியில் விபத்தில் பலியான தாய் – குழந்தை நினைவாக பேருந்து நிழற்குடை

December 26, 2025

Recent News

ஒரே வாரத்தில் 22,000 ரூபாயால் அதிகரித்துள்ள தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்

ஒரே வாரத்தில் 22,000 ரூபாயால் அதிகரித்துள்ள தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்

December 27, 2025
உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சர்களின் பணம் – அநுரவை சீண்டும் நாமல் எம்.பி.

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சர்களின் பணம் – அநுரவை சீண்டும் நாமல் எம்.பி.

December 26, 2025
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்

வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்

December 26, 2025
கிளிநொச்சியில் விபத்தில் பலியான தாய் – குழந்தை நினைவாக பேருந்து நிழற்குடை

கிளிநொச்சியில் விபத்தில் பலியான தாய் – குழந்தை நினைவாக பேருந்து நிழற்குடை

December 26, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy