முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுற்றுலா பயணிகள், தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்த பின்னர் குமிழியை விட்டு வெளியேறி நாட்டின், பிற பகுதிகளுக்கு செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன, இதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அனைத்து மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், சுகாதார சேவைகள் பிராந்திய பணிப்பாளர்கள் மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்கு இந்த முடிவை அறிவித்துள்ளார்.
அதன்படி, கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்த அல்லது தடுப்பூசிகளைப் பெற்ற சுற்றுலாப் பயணிகள் உணவகங்கள், மதுபானங்கள் போன்ற வசதிகளை பயன்படுத்த முடியும்.
மதுபான உரிமம் கொண்ட சுற்றுலா நிறுவனங்கள், மதுவரி ஆணையாளர் ஒப்புதலுடன் விருந்தினர்களுக்கு மதுபானம் வழங்க அனுமதிக்கப்படும் என்றும் சுகாதார சேவை பணிப்பாளர் அறிவித்துள்ளார்