தெரு வீதிகளில் இருந்த பெண் ஒருவர் ஆங்கிலத்தில் சரமாரியாக பேசி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கின்றார்.
கடந்த 3 ஆண்டுகளாக குறித்த பெண் தெருவில் வாழ்கின்றாராம்.
இது குறித்து கேள்விப்பட்ட பெண் ஒருவர் அவருடன் பேசி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இவரின் பெயர் ஸ்வாதி. அவர் சரளமாக ஆங்கிலம் பேசுகின்றார்.
தென்னிந்தியாவைச் சேர்ந்த இவர் கடந்த மூன்று வருடங்களாக அசி காட் பகுதியில் வாழ்ந்து வருகிறார். உள்ளூர்வாசிகள் கொடுக்கும் உணவை அங்கேயே சாப்பிட்டுவிட்டு தூங்குகிறார்
ஸ்வாதி கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டப்படிப்பு முடித்த பட்டதாரி ஆவார். அவரது உடல்நிலை பாதிக்கப்பட்ட பின்பு தான் தெருவில் வசிக்க தொடங்கியுள்ளார். அவருக்கு குழந்தை பிறந்ததும், உடலின் வலது பக்கம் முற்றிலும் செயலிழந்து பக்கவாதம் வந்துள்ளது.
அப்போது தான் அவள் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். ஸ்வாதியை சிலர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று நினைக்கிறார்கள்.
ஆனால், உண்மையில் அவர் முற்றிலும் ஆரோக்கியமாக இருப்பதாகவும், சரளமாக ஆங்கிலம் பேசுவதாகவும் தெரிய வந்துள்ளது.
தற்போது அவருக்கு உதவி தேவை இல்லையாம் வேலை இருந்தால் சொந்த காலில் நிற்க்க முடியும் என்று தன்னம்பிக்கையுடன் குறிப்பிட்டுளார். இந்த வீடியோவை இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர்.