இலங்கையில் நேற்று மாத்திரம் நீரில் மூழ்கி நால்வர் காணாமல் போயுள்ளனர்.
மன்னாரில் இருவரும், கம்பஹா வத்தளையில் இருவரும் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் 15வயதான சிறுவனும் உள்ளடங்குகிறார். மன்னாரில் ஏரிப்பகுதியில் படகில் பயணம் செய்த இருவர் படகு கவிழ்ந்த நிலையில் நேற்று மாலை முதல் காணாமல் போயுள்ளனர்
21 மற்றும் 27 வயதானவர்களே காணாமல் போயுள்ளனர். இவர்களை தேடும் பணிகள் இடம்பெறுகின்றன.
இதேவேளை வத்தளையில் திக்கோவிட்ட பகுதியில் நீராடச்சென்ற 15வயதான சிறுவன் ஒருவர் உட்பட்ட இருவர் காணாமல் போயுள்ளனர்.


















