ஆரோக்கியத்தை அள்ளித்தரும் உணவுகளில் ஒன்றான மக்காச்சோளம் குறித்த பல தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
மக்காச்சோளம்
மக்காச்சோளம் உலகம் முழுவதும் பயிரிடப்படும் ஒரு உணவுத் தானியமாகும். உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் ஒரே உணவு பொருள் இதுதான்.
மக்காச்சோளத் தாவரங்கள் 7 மீட்டர் (23 அடி) உயரம் வரை வளர்கின்றன. வணிக அடிப்படையில் பயிராகும் மக்காச்சோளத் தாவரங்கள் 2.5 மீட்டர் (8 அடி) வரை உயரமாக வளர்கின்றன.
இனிப்பு மக்காச்சோள வகை பிற மக்காச்சோள வகைகளை விட குட்டையானது.
மக்காச்சோளம் வரலாறு
சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு பிரேசிலின் தெற்கு பகுதியில் வாழ்ந்த அமெரிக்க பூர்வகுடிகள் முதன் முதலாக மக்காச்சோளத்தைப் பயிரிட்டனர்.
15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஐரோப்பியர்களுக்கு அமெரிக்காவுடன் ஏற்பட்ட தொடர்புகளைத் தொடர்ந்து இது உலகின் பல பகுதிகளுக்கும் பரவியது.
உலகின் சோள உற்பத்தியில் சரிபாதியளவு தென் அமெரிக்கா, மற்றும் வட அமெரிக்காவில் தான் நடைபெறுகிறது.
மேலும் இந்தியா, சீனா, பிரேசில், பிரான்ஸ், இந்தோனேசியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் அதிகம் பயிரிடப்படுகிறது.
மக்காச்சோளத்தை எதற்காக பயன்படுத்துகிறார்கள்?
மக்காச்சோளத்தை பெரும்பாலும் சோளப்பொரி (Popcorn) செய்யவே பயன்படுத்துகின்றனர்.
ஒரு சில மக்காச்சோள வகைகளி்ல் இருந்து எத்தனால், கால்நடைத் தீவனங்கள், சோளமாவு (Corn Starch) சோளச் சாறு (corn syrup), மற்றும் சோள எண்ணெய் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன.
மக்காச்சோளம் வகைகள்
பல வகையான மக்காச்சோள பயிர்கள் பயிரிடபடுகின்றன. அவை குழி மக்காச்சோளம், சோளப்பொறி மக்காச்சோளம், மாவு மக்காச்சோளம், இனிப்பு மக்காச்சோளம், கடின மக்காச்சோளம், மெழுகு மக்காச்சோளம், அமைலோ மக்காச்சோளம், உறைய மக்காச்சோளம், வரி மக்காச்சோளம் உள்ளிட்ட மக்காச்சோள வகைகள் உள்ளன.
மக்காச்சோளத்தில் சத்துக்கள்
சோளத்தில் இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், துத்தநாகம், செம்புச் சத்து போன்ற பல வகையான உடலுக்கு அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்திருக்கின்றன.
மேலும் மற்ற உணவு வகைகளில் இல்லாத வேதிப் பொருளான செலினியம் தாதுப்பொருளும் சோளத்தில் நிறைந்திருக்கிறது.
முக அழகு
பெரும்பாலான முக அழகு சாதனப் பொருட்களில் சோளம் சார்ந்த பொருட்கள் அதிக அளவு உபயோகிக்கப்படுகிறது.
சோளத்தில் நார்ச்சத்து அதிகமிருப்பதால் இதை சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் ஈரப்பததன்மை காக்கப்படுவதோடு, சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்கிறது.
சோள மாவை தண்ணீர் அல்லது சிறிது பால் கலந்து நன்றாக முகத்தில் பூசி கொண்டு, சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவி வர முகப்பரு தழும்புகள் எண்ணெய் வழிதல் போன்ற குறைபாடுகள் நீங்கி பளபளப்பான முக தோற்றத்தை தரும்.
ஞாபக மறதி மாறும்
அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்படுவது, ஞாபக மறதி நிலை மற்றும் தோல் சம்பந்தமான வியாதிகள் ஒன்று சேர்ந்து ஏற்படுவதை பெல்லாக்ரா என அழைக்கின்றனர்.
அதிலும் குறிப்பாக தயாமின் மற்றும் நியாசின் ஊட்டச்சத்துக்கள் இந்த சோளத்தில் இருக்கின்றன.
தயாமின் சத்து உடலில் நரம்பு மண்டலங்கள் சீராக இயங்க உதவும். இந்தப் பெல்லாக்ரா குறைபாடு உடலில் நியாசின் சத்து குறைபாட்டால் ஏற்படுகின்றது.
சோளம் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு தயாமின் மற்றும் நியாசின் சத்துக்கள் கிடைக்க பெற்று ஞாபக மறதி மற்றும் தோல் வியாதிகள் விலகி ஓடும்.
உடல் எடை
100 கிராம் சோளத்தில் 365 கலோரிச் சத்துக்கள் இருக்கின்றது. ஆகவே உடல் எடை கூட கலோரி சத்துக்கள் நிறைந்த ஒரு இயற்கை உணவுப் பொருளாக சோளம் இருக்கிறது.
மேலும் இந்த சோளத்தில் இருக்கின்ற மஞ்சள் மற்றும் வெள்ளை நிறப்பொருட்கள் விரைவில் உடல் எடை கூடுவதற்கு உதவுகிறது.
சராசரி உடல் எடைக்கு குறைவாக இருப்பவர்கள் சோளத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் கூடிய விரைவில் போதுமான எடையை பெற முடியும்.
இதய வியாதிகள் மாறும்
சோளத்தில் இருக்கும் ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் சத்துக்களை குறைத்து ரத்த நாளங்கள் நரம்புகள் மற்றும் இதயத்திற்கு செல்லக்கூடிய நரம்புகள் போன்றவற்றில் கொழுப்புகள் படிந்து விடாமல் தடுத்து சீரான ரத்த ஓட்டம் செல்வதை உறுதி செய்து இதய பாதிப்புகள் ஏற்படாமல் காக்கிறது.
மேலும் சோளத்தை பச்சையாக சாப்பிடுவதாலும், சோளத்திலிருந்து பெறப்படும் சோள எண்ணெய்யை உணவு பயன்பாட்டிற்கு உபயோகிப்பதாலும் இதய நலம் காக்கபடுவதாக பல மருத்துவ ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
ரத்த சோகை
இரும்புச்சத்து அதிகம் உள்ள சோளத்தை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிட்டு வருபவர்களின் உடலில் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தி அதிகரித்து, இரத்த சோகை குறைபாடு விரைவில் நீங்குவதாக பல முறை மருத்துவர்கள் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
கண்பார்வை
குறிப்பாக 45 வயதை கடந்த பலருக்கும் கண்களில் கண்புரை குறைபாடு ஏற்படுகிறது. கண்புரை குறைபாடு ஏற்படுவதை பெருமளவு குறைக்கும் சக்தி சோளத்தில் இருக்கும் பீட்டா கரோட்டின் கொண்டுள்ளது.
கண்களின் செல்களின் வளர்ச்சியை ஊக்குவித்து கண்பார்வை கெடாமல் பாதுகாக்கவும் சோளத்தில் இருக்கின்ற பீட்டா கரோட்டின் சத்துக்கள் உதவுகிறது.
நீரிழிவு பிரச்சனை
சோளத்தில் பைட்டோகெமிக்கல் எனப்படும் வேதிப்பொருள் நிறைந்திருக்கிறது. பைட்டோ கெமிக்கல் உடலில் இயற்கையாக உற்பத்தியாகும் இன்சுலின் ஹார்மோன் சுரப்பை சீராக வைத்து, நோயாளிகளுக்கு ரத்தத்தில் திடீரென சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் ஆபத்தான நிலையை தடுக்கிறது.
மேலும் பரம்பரை மற்றும் சரியான உணவுப் பழக்கம் இல்லாததும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாத நிலையில் இருக்கும் நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து சோளம் சாப்பிட்டு வந்ததில் அவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருந்ததை ஆய்வுகளில் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
மூலம், மலச்சிக்கல் மாறும்
சோளத்தை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவதால் நார்ச்சத்து நமக்கு முழுமையாக கிடைக்கின்றது. இந்த நார்ச்சத்து மூல நோய் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சாப்பிடும் உணவுகள் கழிவுகளாக மாறும் போது அவை நீர் வற்றி இறுக்கிக் கொள்வதை தடுத்து சுலபமாக மலம் வெளியேறுவதை உறுதி செய்கிறது.
வயிறு புற்றுநோய்கள் மாறும்
சோளத்தில் இருக்கும் நார்ச்சத்து குடல், வயிறு புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
வயிற்றில் செரிமான அமிலங்கள் சுரப்பை சரி செய்து உண்ணும் உணவுகள் நன்றாக ஜீரணம் ஆக வழிவகை செய்கிறது.
கர்ப்பிணி பெண்கள்
கருவுற்ற பெண்கள் அடிக்கடி சோளம் சாப்பிட்டு வருவது அவர்களுக்கும், அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும் பெருமளவு உதவுகிறது.
மக்காச்சோளத்தை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை:
மக்காச்சோளம் இலசாகவும் இல்லாமல் அதிக அளவு முத்தியதாகவும் இல்லாமல் மக்காச்சோளத்தை அமுக்கி பார்க்கும் போது அது உள்ளே போகாமல் மெதுவாகப் போகும். அவ்வாறு இருக்கும் மக்காச்சோளத்தை வாங்கி பயன்படுத்தவும்.
குறிப்பு:
மக்காச்சோளத்தில் சிறிது இனிப்புத் தன்மை இருப்பதற்கு காரணம் அதில் உள்ள சுக்ரோஸ். அதனால் சோளத்தை சர்க்கரை நோயாளிகள் அளவிற்கு அதிகமாக சாப்பிடக் கூடாது.




















