நாடாளுமன்றத்திற்கு அருகில் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பொல்துவ சந்தியில் உள்ள நாடாளுமன்ற நுழைவாயில் பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் குழுவை கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிறுத்திய பின்னர் பிணையில் விடுவித்துள்ளார்.
இந்த நிலையில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மகரகம பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக, கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















