நாளாந்தம் சராசரியாக 4,000 மெட்ரிக் தொன் ஒட்டோ டீசல் மற்றும் 2,500 மெட்ரிக் தொன் ஒக்டேன் 92 ரக பெற்றோல் விநியோகிக்கப்படுவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய எரிபொருள் இருப்பு தொடர்பில் ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் நொரோச்சோலை அனல்மின் நிலையம் மீளமைக்கப்படும் வரை மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் ஒட்டோ டீசல் வெளியிடப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 40,000 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் கச்சா எண்ணெய் எதிர்வரும் திங்கள்கிழமை கப்பல்களில் இருந்து இறக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.


















