அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2022 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணை நாளையுடன் (20) நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு எதிர்வரும் ஜீன் மாதம் 6ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே மாதம் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















