நாளைய தினம் (20-06-2022) முதல் மூடப்படவுள்ள கொழும்பு மற்றும் ஏனைய முக்கிய நகரங்களில் உள்ள பாடசாலைகளில் இணையவழிக் கல்வியை தொடர்வதற்கு ஆதரவளிக்குமாறு ஆசிரியர்களிடம் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் எதிர்வரும் வாரத்தில் பாடசாலைக் கல்வியை தொடர்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ZOOM தொழில்நுட்பம் ஊடாக நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.