தங்கத்தின் விலை கடந்த சில மாதமாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த மாதம் ஜூலை முதல் நாள், மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.
இந்திய மக்களிடம் தங்கத்தின் மீதான மோகம் அதிகமாக உள்ள நிலையில், தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்து வருகிறது. சென்னையில் நேற்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ரூ.38,560க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்படி கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, 4,820 ரூபாய்க்கு விற்பனையானது.
தங்கத்தின் இன்றைய விலை
சென்னையில் இன்று காலை நிலவரப்படி, தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 18ரூபாயும், சவரணுக்கு 144 ரூபாயும் குறைந்துள்ளது.
இந்நிலையில் அடிப்பெருக்கு தினமான இன்று, 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.18 சரிந்து 4,802 ரூபாயாக, சவரனுக்கு ரூ.144 குறைந்து 38,416 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
ஆடி பெருக்கில் தங்கம்
ஆடி பதினெட்டு நாளான இன்று விவசாயம் செழிக்க மாரியம்மனை வழிபடக்கூடிய அற்புத நாள். ஆடி பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கேற்ப இந்த மாதத்தில் விதைத்தால் செழித்து வளரும் என்பதைப் போல, இந்த ஆடி 18ல் வாங்கும் எந்த ஒரு பொருளும் பெருகும் என்பது நம்பிக்கை.
அதனால் பெரும்பாலானோர் இன்று ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்க முயற்சிப்பர்.