சிங்கப்பூரில் தங்கியுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ரஜபக்க்ஷவின் விசாவை மேலும் 14 நாட்களிற்கு நீடிக்குமாறு இலங்கை அரசாங்கம் சிங்கப்பூர் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
11 ம் திகதி விசா முடிவடைந்ததும் நாடு திரும்பவேண்டிய நிலையில் முன்னாள் ஜனாதிபதி காணப்பட்டார். எனினும் இலங்கை அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளதை தொடர்ந்து கோத்தபாய ராஜபக்ச மேலும் இரண்டு வாரம் சிங்கப்பூரில் தங்கியிருப்பார் .
அதேவேளை விசா முடிவடைவதால் கோட்டாபய ராஜபக்ச விரைவில் நாடு திரும்பவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.