இலங்கையில் கோழி முட்டையின் விலையானது கடந்த சில தினங்களாக ஏறி இறங்கும் நிலை காணப்படுகின்றது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் முட்டையின் விலை குறைக்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பிரதமர் தினேக்ஷ் குணவர்த்தவுடனான கலந்துரையாடலின் பின்னர் இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
கால்நடை வைத்தியர்கள் சங்கம், கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் ஏனைய நுகர்வோர் உணவு உற்பத்தியாளர்கள் தாம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வில் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத், வாடிக்கையாளர் சேவை அதிகார சபையின் தலைவர் சிசிர சாந்த நிரியெல்ல, மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேணுகா பெரேரா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் கலந்துரையாடலுக்குப் பிறகு, வர்த்தக அமைச்சர், நுகர்வோர் ஆணையத் தலைவர், மில்கோ நிறுவனத்தின் தலைவர், கால்நடை மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள், முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.
இதனையடுத்து வரும் திங்கட்கிழமை முதல் முட்டை விலை குறைக்கப்படும் என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.