திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் மேற்பிரிவு தோட்டத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்து, பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்றையதினம் (03.10.2022) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் 46 வயதுடைய மூன்று குழந்தைகளின் தாயான இராமசாமி காளியம்மா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரின் இறுதிக் கிரியைகளுக்காக, நுவரெலியா மாவட்ட அனர்த்த நிவாரண நிலையம் நிதியுதவி வழங்கியுள்ளது.
இதற்கமைய, 25,000 ரூபாய் பணம், உயிரிழந்த பெண்ணின் கணவனிடம் நேற்றைய தினம் கையளிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா பிரதேச செயலாளர் விதுர சம்பத் மற்றும் நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரஞ்சித் அழககோன் ஆகியயோர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் குடும்பத்தாரிடம் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை கையளித்துள்ளனர்.
முதற்கட்டமாக உயிரிழந்த தாயின் இறுதி கிரியைகளுக்காக. 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் இறப்புச் சான்றிதழ் வழங்கிய பின்னர் 75,000 ரூபாய் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.