துளையில் ஆசிரியரொருவர் பாடசாலைக்குள்ளேயே, தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான அறிக்கையை, ஓரு வாரத்திற்குள் தனது கவனத்திற்கு கொண்டு வருமாறு, கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார், மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அவசரக் கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
அவரது கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
‘ பண்டாரவளை கல்வி வலயத்தின் பூனாகலை இலக்கம் 1 தமிழ்ப் பாடசாலை ஆசிரியரொருவர், வெளியாட்களினால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட ஆசிரியர் தியத்தலாவை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆசிரிய குழாமினர், பணிப்பகிஸ்கரிப்பு
இந்நிலையில் ஆசிரியர் மீதான தாக்குதல் சம்பவத்தைத் கண்டித்து, குறிப்பிட்ட பாடசாலை ஆசிரிய குழாமினர், பணிப்பகிஸ்கரிப்பினை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாகவும் இருந்து வருகின்றன.
ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஓரு வாரத்திற்குள் முழுமையான அறிக்கையை, எனது கவனத்திற்கு கொண்டு வருமாறு, கேட்டுக்கொள்கின்றேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவரது கடிதத்தின் பிரதிகள், ஜனாதிபதி, பிரதமர், கல்வி அமைச்சர், ஊவா மாகாண ஆளுனர், கல்வி அமைச்சின் செயலாளர், ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.