2021 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றி பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் தாம் தெரிவு செய்யும் கற்கை நெறி மற்றும் பல்கலைக்கழகத்திற்கு நாளை பதிவு செய்ய முடியும் என அதன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் நாளை வழங்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.




















