வயல்வெளியில் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்ட மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எஹலியகொட, பஹலகம, ரிலாகும்புர வயல் பகுதியில் நேற்று (28) காலை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
விவசாய உற்பத்திகளை விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் வகையில் இந்த மின்சார வேலி அமைக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் 59 வயதுடையவரே உயிரிழந்த நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக எஹலியகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.