அரசியலமைப்பு சபைக்கு சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பில் இன்று (01) விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று பிற்பகல் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்த கலந்துரையாடல்
இக் கலந்துரையாடலில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இணைந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பாக கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.