தனது இரு பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் அதனை அருந்திய நிலையில் வத்துபிட்டியல வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தாயும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தாயினால் விஷமூட்டப்பட்ட வந்த ஐந்து வயது சிறுவன் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றுமுன்தினம் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
இவர்கள் கம்பஹா மாவட்டத்தின், லோலுவாகொட தலாஹேன பிரதேசத்தில் வசித்து வந்தவர்களாவர்.
அண்மையில் குறித்த தாய் தமது இரண்டு பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்ததுடன் தானும் விஷமருந்தியுள்ளார்.
மேலும் இந்த நிலையில் விஷம் அருந்திய எட்டு வயதான மற்றொரு சிறுவன் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.