யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் சினிமா பாணியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தில் 29 வயதுடைய சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்டவருக்கு உடம்பில் காயங்கள் காணப்படுவதனால் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டும் அதேவேளை விரைவில் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
சம்பவத்தின் பின்னனி யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் பட்டப் பகலில் திரைப்பட பாணியில் வாகனத்தால் மோதி விபத்தை ஏற்படுத்திய பின்னர் கும்பல் ஒன்றினால் வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டதில் நால்வர் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு வாள்வெட்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக செய்தியாளர் தெரிவித்தார்.