கைது செய்யப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கையெழுத்து போராட்டம் நடைபெற்றுள்ளது.
நாடுமுழுவது முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த கையெழுத்து போராட்டம் இன்று (29.01.2023) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் யாழ். பேருந்து நிலையத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது இவர் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுதலை செய்யக் கோரியும், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரியும் கையெழுத்து போராட்டம் இடம்பெற்றுள்ளது.
குறித்த போராட்டத்தில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.